காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துகொள்ள வேண்டும் : கலெக்டர் எச்சரிக்கை

 


திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

திருச்சி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் தொடர்புடைய அனைத்து வியாபாரிகள், அங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது . மேற்படி முகாமில் கலந்து கொண்டு அனைவரும் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளலாம்.

அவ்வாறு கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளாத வியாபாரிகள், பணியாளர்களுக்கு மீண்டும் காந்தி மார்க்கெட் செயல்படும் போது பணிபுரிய அனுமதி மறுக்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவுதலைத் தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்

Post a Comment

Previous Post Next Post