ஸ்ரீரங்கத்தில் நடைபாதையில் தாறுமாறாக ஓடிய கார் - 3 பேர் பலி

 


திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் சாலையோர நடைபாதையில் ஏராளமான யாசகர்கள் இரவில் படுத்து உறங்கி தங்கி வருகின்றனர். இந்த நிலையில் அம்மா மண்டபம் அருகே உள்ள கீதாபுரம் பகுதியிலுள்ள சாலையோர நடைபாதையில் வழக்கம் போல் யாசகர்கள் இரவில் படுத்திருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் வேகமாக வந்த கார் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி அம்மா மண்டபம் சாலையில் கீதாபுரம் அருகே நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது ஏறியது. இதை கண்ட அப்பகுதிவாசிகள் காரில் வந்தவர்களை அடித்து உதைத்தனர். மேலும் அந்த காரை அடித்து நொறுக்கினர். இந்த விபத்தில் யாசகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனை அடுத்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர நடைபாதையில் படுத்து இருந்தவர்கள் மீது ஏறியதாக கூறப்படுகிறது.




Post a Comment

Previous Post Next Post