மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவில் கலைப் பண்பாட்டு போட்டிகள்



மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலை பண்பாட்டு திருவிழாவையொட்டி வட்டார அளவிளான கலைப்போட்டிகள்; நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கடந்த மாதம் 23:ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கலை பண்பாட்டு திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கட்டுரைபோட்டி, பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கவிதை எழுதுதல், ஓவியபோட்;டி, நடனம், மேற்கத்திய நடனம், நாடகம், கரகாட்டம், ஒயிலாட்டம், இசைகருவிகள் வாசித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. 

அந்தந்த பள்ளிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் வட்டார அளவில் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று அரசு பெண்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டிகளை பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் முத்துசெல்வன் வரவேற்றார். 6,7,8, 9,10, 11,12ஆம் வகுப்புகளுக்கான கரகாட்டம், ஒயிலாட்டம், மேற்கத்திய நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், நடனம் உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. இதனால் பள்ளி வளாகமே விழாகோலமாக காணப்பட்டது. பள்ளி மாணவிகள் அனைவருமே மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். 

வட்டார அளவில் இங்கு நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறுபவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளிலும், மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 


Post a Comment

Previous Post Next Post