சமயபுரம் அருகே அனுமதியின்றி மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது

சமயபுரம் அருகே உள்ள எசனகோரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சமயபுரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது எசனகோரை வடக்கு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் ராமஜெயம்(வயது 25) என்பவர் மோட்டார் சைக்கிளில் அனுமதியின்றி மணல் மூட்டைகளை ஏற்றிச்சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் விரட்டிச் சென்ற நிலையில், அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று எசனகோரை பகுதியில் இருந்த ராமஜெயத்தை போலீசார் கைது செய்தனர்.

Post a Comment

Previous Post Next Post