கடந்த வாரம் புதன்கிழமை (20-10-2021) அன்று நமது கரிகாலப் பேரரசு இணையதள செய்தியில்
மண்ணச்சநல்லூர் அருகே சா.அய்யம்பாளையம் கீழகருங்காடு நால்ரோடு கிழக்கு சாலையில் கடந்த 18 மாதங்களாக புதிய சாலை அமைப்பதாக சொல்லி மக்கள் பயன்பாட்டில் இருந்த 10 அடி பஞ்சாயத்து சாலை தற்போது 1.5 ஜல்லி பெயர்த்து போடப்பட்டு ஒத்த அடி பாதை போல் இரு சக்கர வாகனம் சாலையின் ஒருபுறம் மட்டுமே செல்லும் சூழ்நிலை உள்ளதாகவும் சாலை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததாக வெளியானது.
தற்போது இன்று (26-10-2021) ஆறே நாட்களில் துரித நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்
Tags:
நம்ம ஊரு செய்திகள்