மோட்டார் சைக்கிள் விபத்து ; திருப்பைஞ்ஞீலி பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் பலி - பள்ளி மாணவர்கள் இறங்கல்

மண்ணச்சநல்லூர் பண்டரிநாதன் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 44). இவர் திருப்பைஞ்சீலியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் பூனாம்பாளையத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் புறவழிச்சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். உளுந்தங்குடி அருகே சென்றபோது அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

உடற்கல்வி ஆசிரியர்இறந்ததால் திருப்பைஞ்ஞீலி முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


Post a Comment

Previous Post Next Post