மண்ணச்சநல்லூர் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
மண்ணச்சநல்லூர் அருகே மேலசீதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஸ். இவரது மகன் மோகன் வயது 23. இவர் டெக்கரேசன் பணிகளை செய்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டுகொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலிசார் பிரேத்தை கைப்பற்றி பிரேத பரிசோhனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்