சாலை ஓரங்களில் இருக்கும் பனை மரங்களை அகற்றப்படாமல் சாலை பணியை மேற்கொள்ள ; இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

ஒரு பனை மரம் வளர குமார் 15 லிருந்து 25 ஆண்டுகள் வரை ஆகிறது.

தமிழகத்திற்கு நினைவு சின்னமாக விளங்கும் பனைமரம் என்பது பனை விதையிலிருந்து பனை மரம் வரை அனைத்துமே  தேவைப்படுகிறது மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருந்து வருகிறது.

இந்த  மரம் திருச்சி முதல் தொட்டியம் வரை செல்லும் சாலை ஓரங்களில் சுமார் 100 மரங்கள் நட‌ப்பட்டு உள்ளது.

தற்போது சாலை விரிவாக்க பணிக்காக அந்த மரங்கள் அகற்றி சாலை விரிவாக்கம் மேற்கொண்ட வருகின்றனர்.

இதனால் இயற்கை சீரழிவு ஏற்பட்டு வருவதாகவும் தற்போது சாலைகளில் பாதையில் செல்வதற்கும் வருவதற்கும் நடுவில் பூச்செடிகளையும் வைத்து வருகின்றனர்.

இதற்கு பதிலாக இருக்கும் பனை மரங்களை நடுவில் வைத்துக் கொண்டு திருச்சி செல்வதற்கு ஒரு புறம் தொட்டியம் வருவதற்கு வழியாகவும் செல்வது போல் சாலை விரிவாக்கம் பணி மேற்கொண்டால் இயற்கை பேரழிவில் தப்பிக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

Post a Comment

Previous Post Next Post