திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி மாநில கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கல்வியார்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் கருத்து கேட்புக்கூட்டம் நடை பெறும் இடங்கள் பின்வருமாறு :-
அந்தநல்லூர் - ஸ்ரீரங்கம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
லால்குடி - நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
மண்ண ச்சநல்லூர் - அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி,
மணிகண்டம் - சோமரச ம்பேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளி,
மணப்பாறை- ஜீவன் கல்வியியல் கல்லூரி,
மருங்காபுரி - கோவில்பட்டி விடியல் மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளி,
முசிறி - எம்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரி,
புள்ளம்பாடி - குழந்தை யேசு மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி,
திருச்சி - தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலை ப்பள்ளி,
திருவெறும்பூர் - பாய்லர் பிளான்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
தொட்டி யம் - கொங்கு நாடு (பி.எட்) கல்லூரி,
தா.பேட்டை - சௌடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
உப்பிலியபுரம் - எரகுடி ஆர்.எஸ்.கே.மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி,
வையம்பட்டி - ஆர்.சி.மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி
ஆகிய இடங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.