இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை தங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 24), பஞ்சுமில் தொழிலாளி. பக்கத்து ஊரான குழவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் கலா (21).

இவரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். பின்னர் கடந்த ஓராண்டாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் பரந்தாமனுக்கும் கலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றினர். அப்போது பரந்தாமன் திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கலா கர்ப்பம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பரந்தாமனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புத்தினார். ஆனால் அவர் கேட்கவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்ட கலா மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதில், பரந்தாமன் திருமண ஆசைகாட்டி தன்னை கற்பழித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரந்தாமனை கைது செய்தனர். கைதான பரந்தாமனும், கலாவும் வேறு வேறு சமூகத்தினராக இருக்கின்றனர். இதுவே திருமணத்துக்கு தடையாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post