திருமணமான 3 மாதத்தில் செவிலியர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். மற்றொருசம்பவத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.சிறுகனூர் அருகே உள்ள கொணலை ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் சலேஷ் டேனியல் ராஜ். ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி பெல்சி (வயது 25). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. பெல்சி திருச்சி நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை பெல்சி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றிபரிதாபமாகஉயிரிழந்தார்.இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆவதால், இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்