செங்குன்றத்தை அடுத்த அலமாதி நேதாஜி நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 34). இவர், ஆவடியை அடுத்த வெள்ளானூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர், பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார்
இதில் பலத்த காயம் அடைந்த அவரை, சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி பேராசிரியர் லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான லோகநாதனுக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். தற்போது சாந்தி மீண்டும் கர்ப்பமாக உள்ளார்
Tags:
தமிழகம்