6 பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் ஆகிய சாதிப் பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திர வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்கலாம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை, ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத் துறை, சட்டத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அதனை மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சான்றிதழ் வழங்க அதிகாரம் பெற்ற அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Tags:
தமிழகம்