ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த, 55 கார்கள் உள்பட 4,717 வாகனங்கள் பறிமுதல்

 


திருச்சி மாநகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் (மே) 10-ந் தேதி முதல் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி நேற்று முன்தினம் வரை முக கவசம் அணியாத நபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள் என 9,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த மாதம் 24-ந் தேதி முதல் இதுவரை விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 55 கார்கள், 144 ஆட்டோக்கள், 4,518 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 4,717 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post